Thursday, March 1, 2012

மார்ச் மாதம்: திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் அழைப்பிதழ்.


திருச்சிற்றம்பலம் 

சைவா போற்றி.
தலைவா போற்றி.

ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. 

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்.

நமது திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் மார்ச்சு மாத திருக்கோவில் உழவாரப் பணி 04.03.2012 ஞாயிறு காலை கோயம்பேடு (சென்னை) அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் நிகழ திருவருள் கூட்டியுள்ளது.

இதனைக் கண்ணுறும் அன்பர்கள் சுற்றத்துடனும்,நண்பர்களுடன் 04-03-2012 அன்று காலை ஏழு மணிக்கே வந்திருந்து உழவாரப் பணியினை சிறப்பாக நடத்தி தருமாறு வேண்டுகிறோம். 

திருக்கோவிலின் தீப எண்ணெய்க்கு பெருமளவில் அடியார்களின் உதவி தேவைப்படுகிறது.

மதிய நேரத்தில் தொண்டர்களுக்கு அமுது செய்விக்கப்படும்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் உள்ள இக்கோவிலுக்கு வந்து உழவாரப்பணி செய்து சிவபெருமானின் திருவருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

திருக்கோவில் உழவாரப் பணி மன்ற அமைப்பாளர் சிவ. நா. ஆடலரசன் அவர்களை Cell No.9445121080 இல் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.
சிவத் தொண்டாற்றி சிவனருள் பெறுக.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.